இயேசுவின் பிரபலமாகாத யோசனைகள்
பதினைந்து ஆண்டுகளாக, மைக் பர்டன் தனது சிறிய நகரத்தில் நடத்திக்கொண்டிருந்த நினைவைவிட்டு நீங்காத கடையில் வெறுப்பு நிறைந்த கூட்டங்களை நடத்தினார். ஆனால் 2012-ல் அவரது ஈடுபாட்டை அவரது மனைவி கேள்வி கேட்கத் தொடங்கியபோது, அவரது இதயம் மென்மையாக்கப்பட்டது. தனது இனவெறி கருத்துக்கள் எவ்வளவு தவறானவை என்பதை அவர் உணர்ந்தார், இனி ஒருபோதும் அப்படிப்பட்ட நபராக அவர் இருக்க விரும்பவில்லை. தங்கள் உறுப்பினர்களில் ஒருவரது குடியிருப்பில் அவர்கள் வாடகைக்கு வாழ்ந்துக் கொண்டிருந்தனர் அந்த குடியிருப்பில் இருந்த்து அவர்கள் குடும்பத்தினரை உதைத்து போராளி குழு பதிலடி கொடுத்தது.
உதவிக்காக அவர் எங்கே போனார்? ஆச்சரியப்படும் விதமாக, எற்கெனவே சண்டையிட்ட ஒரு உள்ளூர் கருப்பின போதகரிடம் சென்றார். போதகரும் அவரது சபை மக்களும் மைக்கின் குடும்பத்திற்கு சில காலம் தங்கும் வசதி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினர். அவர் ஏன் உதவ ஒப்புக்கொண்டார் என்று கேட்டபோது, பாஸ்டர் கென்னடி விளக்கினார், “இயேசு கிறிஸ்து மிகவும் பிரபலமற்ற சில காரியங்களைச் செய்தார். உதவி செய்ய வேண்டிய நேரம் வரும்போது, நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று தேவன் விரும்புகிறாரோ அதைச் செய்யுங்கள். ” பின்னர் மைக் ஒரு முறை கென்னடியின் தேவாலயத்தில் பேசினார் அப்போது தான் வெறுப்பை பரப்பினதர்காக கறுப்பின சமூகத்திடம் மன்னிப்பு கோரினார்.
மலைப்பிரசங்கத்தில் செல்வாக்கற்ற சில யோசனைகளை இயேசு கற்பித்தார்: “உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு . . . . உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களைத் துன்பபடுத்துகிரவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்” (மத்தேயு 5:42, 44). தேவனின் அழைப்பைப் பின்பற்றுவதற்கான தலைகீழ் வழி அது. இது பலவீனம் போல் தோன்றினாலும், அது உண்மையில் தேவனின் பலத்தை கொண்டு செயல்படுவது.
நமக்கு கற்பித்தவரே அவர் எதிர்பார்க்கும் விதத்தில் இந்த தலைகீழான வாழ்க்கையை வாழ்வதற்கான பெலனை கொடுப்பவர்.